Sunday, March 29, 2009

திருமதி ஒரு வெகுமதி!



முள்ளாய் வளர்ந்த என்னை
முல்லை மலராக்கினாய்!

கல்லாய் கிடந்த என்னை
கற்கண்டாக்கினாய்!

மிருகமாய் இருந்த என்னை
மனிதனாக்கினாய்!

ரசிகனாய் இருந்த என்னை
கவிஞனாக்கினாய்!

தகரமாய் இருந்த என்னை
சிகரமாக்கினாய்!

ஞானசூனியமாய் இருந்த என்னை
ஞானசூரியனாக்கினாய்!

மூங்கிலாய் இருந்த என்னை
புல்லாங்குழலாக்கினாய்!

தண்ணீராய் இருந்த என்னை
பன்னீராக்கினாய்!

புயலாய் இருந்த என்னை
தென்றலாக்கினாய்!

இரும்பாய் இருந்த என் மனதை
கரும்பாக்கினாய்!

பொல்லாதவனாய் இருந்த என்னை
நல்லவனாக்கினாய்!


கிறுக்கனாக இருந்த என்னை
ஞானியாக்கினாய்!

முரடனாய் இருந்த என்னை
குழந்தையாக்கினாய்!

விதையாய் இருந்த என்னை
விருட்சமாக்கினாய்!

No comments:

Post a Comment