Sunday, March 29, 2009

காத்திருக்கிறேன் கண்மணி!




என் உயிரே!

என் மனவானில்
உன்னைப் பார்க்காத நாட்கள்
கறுப்பு அமாவாசைகள்…

உன் முகம் பார்க்கும் நாட்கள்
பிரகாசமான பௌர்ணமிகள்!

உனைப் பிரிந்து…
இந்தப் பாலைவனத்தில்
தினம் தினம்
கும்மிருட்டான
அமாவாசை இரவுகளைப்
பார்த்து …
பெருமூச்சுக்களோடும் …
ஏக்கத்தோடும் …
வேதனைகளோடும்…
விரக்தியோடும்…
… வாழும்
நான்
பௌர்ணமி நிலாவைப் பார்க்க
நெஞ்சு நிறைய கனவுகளோடு
காத்திருக்கிறேன்
கண்மணி!



குழந்தை!

அன்பே!

தாம்பத்யம்
எனும் பத்திரிக்கையில்
நாம் எழுதிய
காதல் கவிதை!

திருமணம்
எனும் ரோஜாச்செடியில்
முளைத்த
ரோஜா மொட்டு!

No comments:

Post a Comment