என் உயிரே!
என் மனவானில்
உன்னைப் பார்க்காத நாட்கள்
கறுப்பு அமாவாசைகள்…
உன் முகம் பார்க்கும் நாட்கள்
பிரகாசமான பௌர்ணமிகள்!
உனைப் பிரிந்து…
இந்தப் பாலைவனத்தில்
தினம் தினம்
கும்மிருட்டான
அமாவாசை இரவுகளைப்
பார்த்து …
பெருமூச்சுக்களோடும் …
ஏக்கத்தோடும் …
வேதனைகளோடும்…
விரக்தியோடும்…
… வாழும்
நான்
பௌர்ணமி நிலாவைப் பார்க்க
நெஞ்சு நிறைய கனவுகளோடு
காத்திருக்கிறேன்
கண்மணி!
குழந்தை!
அன்பே!
தாம்பத்யம்
எனும் பத்திரிக்கையில்
நாம் எழுதிய
காதல் கவிதை!
திருமணம்
எனும் ரோஜாச்செடியில்
முளைத்த
ரோஜா மொட்டு!
No comments:
Post a Comment