Sunday, March 29, 2009

ஆண்டவனிடம் ஒரு கருணை மனு!



ஆண்டவா!

சின்னவயசில் படித்த
மாயாஜால கதைகளில் வரும்
மந்திரக்கம்பளம்
எனக்கு வேண்டும்!

ஆயிரக்கணக்கான மைல்கள் தாண்டி
இந்தப் பாலைவனத்தில் வாழும்
நாங்கள்
மந்திரக்கம்பளத்தில் ஏறி
சொந்த நாட்டிற்குச் சென்று
மனைவி, குழந்தைகள்
முகத்தை பார்த்துவிட்டு
விடிவதற்குள்
வந்து விடுகிறோம்…

நாளை காலை
ஆபீஸ் போக வேண்டும்!



புரிதல்

என் பெயர்
அழகு
என்று புரிந்தது…
உன் உதடுகள் உச்சரித்தபோது!



அக்கறைவயல் வரப்பில்

மென்மையான புல்வெளியில்
நீ நடந்தபோது
கவலைப்பட்டேன்…
உன்
மிருதுவான பாதங்களை
புற்கள்
காயப்படுத்தி விடுமோ…?




ரசனை

கண்மணி!
நைல் கட்டரில்
நீ
வெட்டிப்போட்ட
உன்
நகத்தில்
பார்த்தேன்…
பிறைநிலாவை!

No comments:

Post a Comment