Sunday, March 29, 2009

உயில்




நான்
உயில் எழுதுகிறேன்…
என் சொத்து…
என் அன்பு மனைவி!
என் ஆசைக் குழந்தைகள்!



உன் பதில்

எனக்கு
ஐஸ்வர்யாராய்
தேவ்யானி
சிநேகா
மீரா ஜாஸ்மீன்
பிடிக்கும்
என்றேன்.

நீ
அரவிந்தசாமி
அஜீத்
விஜய்
விக்ரம்
பிடிக்கும்
என்பாய்
என்றுதான்
நினைத்தேன்.

நீ சொன்ன பதில் …
‘‘எனக்கு உங்களை பிடிக்கும்’’
………………
வலித்தது….



சமையல் இரகசியம்!


இனியவளே!
எல்லாரும்தான் சமைக்கிறார்கள்…
ஆனால்…
உன் சமையல் மட்டும்
எப்படி இத்தனை ருசியாய் இருக்கு?
எனக்கோர் சந்தேகம்…
உள்ளங்கையில்
தேனை தடவிக் கொண்டு
சமைக்கிறாயோ…?

No comments:

Post a Comment