Sunday, March 29, 2009

கணக்கு சரியா?


இனியவளே!

‘உங்களுக்கு
எத்தனை குழந்தைகள்?’
என்று
எதிர் வீட்டில்
புதிதாய் குடிவந்த பெண்
என்னிடம் கேட்டாள்.

நான்
‘மூன்று குழந்தைகள்’
என்று சொன்னபோது
சந்தேகத்தோடு
என்னை
முறைத்தாயே…

‘அடியே… கள்ளி!
உன்னையும் சேர்த்துத்தானடி
சொன்னேன்’

No comments:

Post a Comment