Sunday, March 29, 2009

இளைப்பாறுதல்



வெளிநாடு…

கவலையை மறக்க
குளிரூட்டப்பட்ட மதுக்கடைகள்…

கலர்தோல் அழகிகளின்
ஆட்டம்… பாட்டம்… கொண்டாட்டம்…

எடுப்பான பெண்கள்
இடுப்பை ஆட்டிஆட்டி ஆடும் பெல்லி டான்ஸ்;…
…………… எல்லாம்
உண்டாம்.


நான் கவலைகள் மறக்கும் இடம்
நீ எழுதிய அன்பு மடல்களும்,
என் பர்ஸில்
புன்னகைக்கும்
நம் குழந்தைகளின் போட்டோக்களும்,
உங்கள் நினைவுகளை
அசைபோட்டபடி
பேரீச்சம்பழ மரங்கள் நிறைந்த ப+ங்காக்களில்
தனியே நடக்கும் தருணங்களும்,
அலுவலக களைப்போடு
இரவுகளில் அயர்ந்து தூங்கும்போது
நீயும், குழந்தைகளும்
வரும் இனிய கனவுகளும்!

No comments:

Post a Comment