Sunday, March 29, 2009

தாய்… தாரம் …



பத்து மாசம்
சுமந்தவள்
தாய்!

வாழ்க்கை
முழுக்க சுமப்பவள்
தாரம்!




முடியாது!

உன்னைப் பற்றி
கவிதை எழுதச் சொன்னாய்..
எப்படி முடியும்…
கவிதையைப் பற்றி
கவிதை எழுத…!


போட்டி!

கண்மணி!

இரவில் வெளியே வராதே!
நிலா
பொறாமைப்படும்
உன் முகத்தைப் பார்த்து…


நிலா

கடவுள் எனும் கணவன்
வானமனைவியின்
நெற்றியில் வைத்த
குங்குமப்பொட்டு!

No comments:

Post a Comment