கண்மணி!
‘‘உங்கள் பிறந்தநாளுக்கு
என்ன பரிசு வேண்டும்?’’
என்று கேட்டாய்…
‘‘எனக்கு
ஆண்டவன் கொடுத்த
விலை உயர்ந்த பரிசே
நீதானடி
என் தேவதையே! ’’
அழகு!
அழகுசாதன திரவியங்கள்
எல்லாம் அழகாயின…
அவைகளை
நீ உன் முகத்தில்
தடவியபோது…
இடம்!
கண்மணி!
நகைக்கடையில்
அந்த தங்கமூக்குத்தியைப்
பார்த்தபோது
அது அழகாய் இருந்ததைவிட
அதை வாங்கி
உன் மூக்கில் போட்டு
பார்க்கும்போதுதான்
அது
ரொம்ப அழகாய் இருக்கிறது!
மச்சம்
காலதேவன்
உன் நிலா முகத்தில்
வைத்த திருஷ்டிப்பொட்டு!
ஒரே இனம்!
குழம்பு வைப்பதற்காக
நான் வாங்கி வந்த
உயிர்மீன்களை
நீ அறுத்தபோது
அவைகள் எல்லாம்
உன் கண்களைப் பார்த்து
கேட்டன…
‘‘மீனே இன்னொரு மீனை
கொல்லலாமா…?’’
No comments:
Post a Comment