துபாய்.
வியாழன் இரவு.
கையில் மதுப்புட்டியோடும்
வாயில் சிகரெட்டோடும்
ரூம்மேட் தர்க்கம் பண்ணினான் :
‘உலகத்தில்
ஆண்டவன் படைத்த எல்லாம்
நாம் ஜாலியாக இருப்பதற்குத்தான்…
இந்த மதுவும்கூட ஆண்டவன் படைத்ததுதான்!’
நான்
கடைசியாய் கேட்டேன் :
‘விஷத்தையும் ஆண்டவன் படைத்திருக்கிறானே…
அதையும் நீங்கள் பருக வேண்டியதுதானே?’
‘………………’