skip to main |
skip to sidebar
நிஜங்கள்… நிழல்கள்…
விடுமுறைநாளில்
நண்பன் வீட்டுக்குச்
சென்றேன்.
காதில் ஹெட்போனை
மாட்டிக் கொண்டு
உற்சாகமாய்
சினிமா பாட்டு
கேட்டுக் கொண்டிருந்தான்.
ஆசையாய் பேச வந்த
குழந்தையை
‘சனியனே…
தொந்தரவு பண்ணாதே’
என்றான்.
‘மட நண்பா!
உன் குழந்தையிடம்
குழந்தையாய் பேசிப்பார்!
அதன் பேச்சு
நீ கேட்கும் இசையைவிட
இனிமையானது!’
No comments:
Post a Comment