
ஆடையில் சேர்ந்த
அழுக்கை
சோப்பு போட்டு
துவைக்க… துவைக்க…
சுத்தமானது ஆடை!
ஆன்மாவில் சேர்ந்த
அழுக்கை அகற்ற
எங்கே
சோப்பு கிடைக்கும்?
குர்ஆன் சொன்னது :
‘இறைவனிடம்
பிரார்த்தியுங்கள்!’
மனம் வருந்தி…
செய்த தவறுகளை
எல்லாம் உணர்ந்து…
மன்னிப்பை
வேண்டி…
ஆண்டவனிடம்
வேண்டுகிறேன்
என் மனதை
சுத்தமாக்க!

No comments:
Post a Comment