
நான்
மன்னன் ஷாஜஹான் அல்ல
சலவைக்கற்களால்
தாஜ்மஹால் கட்ட…
நான்
உன் ஏழைக்கணவன்…
நமக்கு
சொந்தமாய்
ஒரு ஓலைக்குடிசைகூட
இல்லைதான்…
ஆனால்…
என்னால்
அதைவிட பெரிய மஹால்
கட்ட முடியும்
சலவைக்கற்களால் அல்ல…
அதைவிட உயர்வான
அன்பினால்!
ஏன்?
உலக அதிசயங்கள்
எதுவும் எனக்கு அழகாய்
தெரியவில்லை…
மனசில் நீ!
தப்பு பண்ணி விட்டாயா…?
அன்பே!
நீ வைத்த
மீன் குழம்பில்
மசாலாவுக்கு பதில்
தேனை
தவறுதலாய்
கலந்து விட்டாயோ…
இனிக்கிறதே!

No comments:
Post a Comment