
இதயம் கவர்ந்தவளே!
உன்னைப் பார்த்து
பிரமித்து
‘அழகி!’
என்றேன்.
‘ஏய்ய்..
பொய் தானே?’
கன்னத்தில்
அதிர்ஷ்டக்குழிவிழ
சிரித்தாய்…
மயில் ஆடும்
என்பது பொய்யா…?
குயில் பாடும்
என்பது பொய்யா…?
மல்லிகை மணக்கும்
என்பது பொய்யா…?
சொல்… சொல்… சொல்…
- இதெல்லாம் பொய் என்றால்
நான் சொன்னதும் பொய்!
காணவில்லை…
அன்பே!
முதன்முதலாய்
உன்னைப் பார்க்கையில்
உன் கைகளைப் பார்த்து
குழம்பிப் போனேன்…
‘‘தேவதைகளுக்கு
சிறகுகள்
இருக்குமாமே!’’

No comments:
Post a Comment